எம்கேபி நகர் பகுதியில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி சிறையில் அடைப்பு
2022-09-15@ 01:46:57

பெரம்பூர்: எம்கேபி நகர் 12வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது மஸ்தான் (59). இவர், நேற்று முன்தினம் மாலை முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மஸ்தானிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து முகமது மஸ்தான் கொடுத்த புகாரின்படி, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி ஏ.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முனியப்பன் (25) என்பவர்தான் முகமது மஸ்தானிடம் வழிப்பறி செய்தது தெரிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முல்லைநகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த முனியப்பனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முனியப்பன் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!