புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி நியமனம்
2022-09-13@ 14:16:44

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபாலின் (91) பதவிக்காலம் கடந்த ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், மீண்டும் அவரது பதவியை ஒன்றிய அரசு நீடித்தது. இவ்வாறாக கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தனது பதவியை நீடிக்க வேண்டாம் என்று கே.கே.வேணுகோபால் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, அடுத்த புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்பார். இவர் ஏற்கனவே கடந்த 2014 முதல் 2017ம் வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி
சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!