கரூர் பேருந்து நிலையம் அருகே சிக்னல் பழுதால் வாகனஓட்டிகள் அவதி-சீரமைக்க வலியுறுத்தல்
2022-09-13@ 12:25:18

கரூர் : கரூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சிக்னலை சரி பார்க்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பேரூந்து நிலையம் அருகே மனோகரா கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த ரவுண்டானாவின் வழியாக கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற அனைத்து பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது.
இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரும் வாகனங்களும் ரவுண்டானா வழியாக செல்கிறது. மேலும், இந்த ரவுண்டானா வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது.முக்கிய சந்திப்பு பகுதியாக மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்நிலையில், அவ்வப்போது ஏற்படும் சிக்னல் பழுது காரணமாக வாகன ஓட்டிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்வதில் ஆர்வம் காட்டி செல்வதால் சில சமயங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, முக்கிய சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் சிக்னல் பழுதின்றி செயல்பட தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
பனி பாதி... மேகம் மீதி.... கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்
புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!