வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா
2022-09-13@ 04:44:12

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீவேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கி, 3ம் தேதி சனிக்கிழமை அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்று வந்தது.
இறுதி நாளான நேற்றுமுன்தினம் காலை புஷ்ப அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு மேல் கோயிலில் இருந்து புஷ்ப அலங்காரத்துடன் புறப்பட்ட வேம்புலி அம்மன் காக்களூர் சாலை, குளக்கரை சாலை, பஜார் வீதி, முகம்மது அலி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற வீதி உலாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம், வாணவேடிக்கையும், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், கரகாட்டம், கேரள செண்டை மேளம், காஞ்சி கைச்சிலம்புடன் ஜாத்திரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர், சேவா சங்கம், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி
ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!
ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்: வைகோ வாழ்த்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!