ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கால் எச்சரிக்கை
2022-09-12@ 19:24:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பெய்து வரும் கன மழையால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், நேற்றைய நிலவரபடி அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அதே அளவு தண்ணீர் உபரியாக திறக்கப்படுவது தொடர்கிறது.
இதனால், ஆழியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மயிலாடுதுறை, சுப்பேகவுண்டன்புதூர் உள்ளிட்ட இடங்களில் ஆற்றை கடக்க போடப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தை தொட்டு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றில் இறங்கி குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், கன மழையால் தரைமட்ட பாலம் எந்த நேரத்திலும் தண்ணீரில் மூழ்கலாம் என்பதால், தரைமட்ட பாலத்தில் வாகனங்களில் கடந்து செல்வதை தவிர்க்க போலீசார் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.
மிகவும் தாழ்வான தரைமட்ட பாலத்தில், போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மாற்றுபாதையில் இயக்கப்படுகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!