போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்-புதிதாக கட்டுவதற்கு மக்கள் கோரிக்கை
2022-09-12@ 12:15:46

போளூர் : போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.போளூர் அருகே கீழ்ப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவில் கோயில் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலும் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்து வருகிறது.
இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதனால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கான்கிரீட் சிமென்ட் பில்லர்களில் உள்ள இரும்பு கம்பிகள் பழுதடைந்து, முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!