சென்னை விமானநிலையத்தில் பயணியிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்
2022-09-11@ 15:10:09

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் துபாய் செல்லும் விமானம் தயார்நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர், அந்த விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா செல்வதற்கு வந்திருந்தார். அவரை சோதனை செய்ததில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஜனார்த்தனத்தை விமானத்துக்கு அனுப்பாமல், நிறுத்தி வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அமெரிக்க நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும், கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் இருந்து இதே விமானத்தில் சென்னை வந்தபோது சாட்டிலைட் போனை எடுத்து வந்திருந்தேன். அப்போது என்னை சாட்டிலைட் போன் எடுத்து செல்வதற்கு சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் தடை செய்யவில்லை. அந்த போனுக்கு இந்தியாவில் தடை உள்ளது என்பதையும் கூறவில்லை. அதனால் இப்போது இங்கிருந்து அமெரிக்காவுக்கு எடுத்து செல்கிறேன் என ஜனார்த்தன் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த சாட்டிலைட் போனை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த போனை இந்திய அரசின் தடையை மீறி பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது சட்டப்படி குற்றம் எனக் கூறி, அந்த சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் சாட்டிலைட் போனுடன் ஜனார்த்தனை ஒப்படைத்தனர். அவர் இந்தியா வந்தபிறகு, சாட்டிலைட் போனில் யார், யாரிடம் பேசினார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்திய பாதுகாப்பு துறையில் மட்டுமே சாட்டிலைட் போனை பயன்படுத்த முடியும். மற்றபடி, பொதுமக்கள் யாரும் சாட்டிலைட் போன் பயன்படுத்தக்கூடாது. எனினும், தீவிரவாதிகள் ரகசியமாக சாட்டிலைட் போனை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால், இந்தியாவில் சாட்டிலைட் போனுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. அதை மீறி பயன்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!