கனமழை காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
2022-09-11@ 10:59:18

உதகை: கனமழை காரணமாக உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையின் மீது விழுந்ததால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை நடுவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் மலைப்பாதையில் நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையின் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் உதகையிலிருந்து கூடலூர், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மழை காரணமாக நடுவட்டம் பகுதியில் சாலையில் விழுந்த பாறைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் கோட்டக் பொறியாளர் பிரேம் தலைமையில் நள்ளிரவு சாலையில் விழுந்த மண்சரிவுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர், அப்போது அவ்வழியாக சென்று சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பின் மூன்று மாநில போக்குவரத்தானது துவங்கியது.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!