தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது
2022-09-10@ 15:08:04

*உபரி நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கடையம் : தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டும் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி ெகாள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது.
இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இதை தவிர்த்து 33க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக கடந்த ஜூலை 25ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், நேற்று ராமநதி அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!