பெரியபாளையம் அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
2022-09-10@ 01:15:02

பெரியபாளையம்: முக்கரம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, சுமார் 400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1925ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கிராம மக்கள் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி அன்று பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து, கே.ஆர்.காமேஸ்வரர் குருக்கள் தலைமையில் 15க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் கலந்துகொண்டு முதல் கால பூஜை, அன்று மாலை இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளும் நடந்த முடிந்தது. இதனை அடுத்து நேற்று காலை நான்காம் கால பூஜைகளான பூஜைகளான கணபதி ஹோமம், விசேஷ தீர்வ்ய ஹோமம், யாத்ரா தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகளும் முடிந்தது.
இதன் பின்னர், புரோகிதர்கள் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்களை மேல தாளங்கள் முழங்க கோயில் சுற்றி வளம் வந்து காலை 10 மணி அளவில் ஆலயத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின்னர், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் வண்ண மலர்களால் திரு ஆபரணங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முகராம்பாக்கம் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி-நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை அதிகாரி ஆய்வு-அதிவேக ரயிலை இயக்கி சோதனை
கடவூர், தோகைமலை பகுதியில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை-பழநி வனத்துறை எச்சரிக்கை
ஆற்காட்டில் சாலைகளில் உள்ள சுகாதாரமற்ற தின்பண்ட கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!