நிலக்கோட்டை அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி
2022-09-09@ 14:24:11

நிலக்கோட்டை : நிலக்கோட்டை கண்மாயில்,ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நிலக்கோட்டை, செம்பட்டி, ஆத்தூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நிலக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. அதில் அதிகமான தண்ணீர் ராஜ வாய்க்கால் வழியாக, செங்கட்டான்பட்டி கண்மாய், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய்க்கு வரும் போது மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது.
மீன்கள் செத்து மிதப்பது குறித்து அறிந்த அப்பகுதி மீன் வியாபாரிகள் கண்மாயில் மீன்கள் செத்து மிதக்கும் மீன்களை வியாபாரத்திற்கு அள்ளி செல்கின்றனர். மீன்கள் எதனால் இறந்தது என்று காரணம் தெரியாமல் இருக்கும் நிலையில் இறந்த மீன்களை வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் இறந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் கொங்கர்குளம் வரத்து வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளுக்குள் அத்துமீறி யாரும் இறங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!