எர்ணாவூர் பாரத் நகர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு
2022-09-09@ 01:29:16

திருவொற்றியூர்: எர்ணாவூர் பாரத் நகர் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எர்ணாவூர், பாரத் நகர் அருகே ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று பலத்த வெட்டு காயங்களுடன் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எண்ணூர் மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் யார் என குறித்து விவரம் தெரியவில்லை. இதனையடுத்து போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!