ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் கூடாது: பிரச்னை ஏற்பட்டால் நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-09-09@ 01:09:33

மதுரை: ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் கூடாது என்றும், பிரச்னை ஏற்பட்டால் நிறுத்தலாம் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடல், பாடல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குருப், ‘‘கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளில் பாலுணர்வை தூண்டும் வகையிலான காட்சிகளோ, வசனங்களோ இருக்கக்கூடாது. ஆபாச நடனம் கூடாது. இரட்டை அர்த்த வாசகங்கள் இடம் பெறக் கூடாது. அரசியல் கட்சி, ஜாதி மற்றும் மதம் குறித்தோ, குறிப்பிட்ட சிலரை தாழ்த்தியோ எந்தவித வாசகங்களும் இடம் பெறக் கூடாது. அரசியல் கட்சி, ஜாதி மற்றும் மதம் சார்ந்து எந்தவித ப்ளக்ஸ் மற்றும் போர்டுகள் வைக்கக் கூடாது. பங்கேற்பாளர்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு சார்ந்த எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும், அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு. பிரச்னை ஏற்படும் போது போலீசார் தலையிட்டு உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
* கபடிக்கும் கட்டுப்பாடு
இதேபோல் கபடி போட்டிகள் நடக்கும் போதும் மேற்கண்ட நிபந்தனைகளுடன் இரு மருத்துவர்கள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் இருக்க வேண்டும். வீரர்களின் உடையில் அரசியல் தலைவர்களின் படங்கள், சின்னங்கள், ஜாதி ரீதியிலான அடையாளங்கள் இருக்கக்கூடாது. ஜாதி ரீதியிலான பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Dance song performance obscene dances problem icourt branch ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆபாச நடனங்கள் பிரச்னை ஐகோர்ட் கிளைமேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!