உக்ரைனில் குறிக்கோளை அடையும் வரை தாக்குதல் தொடரும்: அதிபர் புடின் உறுதி
2022-09-08@ 00:59:38

மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், பொருளாதார தடைகளினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை முடக்க நினைத்தால், உக்ரைன் மீதான அதன் ராணுவ நடவடிக்கைகளின் பிடி இறுகும் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.இது குறித்து விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய புடின், ‘ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை பாதுகாக்கவே உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் அனுப்பப்பட்டனர். டான்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காகவே ரஷ்யா போரிடுகிறது. தனது பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா பணியாது. எங்களின் குறிக்கோளை எட்டும் வரையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவோம்,’ என்று எச்சரித்தார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் மீது லாரி மோதல் 18 பேர் பரிதாப பலி
பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரம்: தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!