நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளி நியமனம்: அமெரிக்க அதிபர் உத்தரவு
2022-09-07@ 16:46:55

வாஷிங்டன்: நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில், இந்திய வம்சாவளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியனை நியமிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். செனட் மூலம் அவரது நியமனம் உறுதிசெய்யப்பட்டால், அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதியாக அருண் சுப்ரமணியன் விளங்குவார்.
முன்னதாக அருண் சுப்ரமணியன் கடந்த 2006 முதல் 2007 வரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளியான வேதாந்த் படேல் (33), தற்போது வெளியுறவுத் துறையின் தினசரி செய்தியாளர் சந்திப்பை நடத்தும் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பெரு நாட்டில் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தல்
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கு: இலங்கை மாஜி அதிபரிடம் போலீஸ் விசாரணை
தோண்ட தோண்ட சடலங்கள்!: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது..!!
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் பலி
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!