ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு; கலெக்டர் தகவல்
2022-09-07@ 01:48:54

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்களை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் மறுசீரமைப்பு விவரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் 29.8.2022 அன்று செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.264 மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண்.129ம் 1500 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டது.
இதில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் பாகம் எண்.129 இரண்டாக பிரிக்கப்பட்டு பாகம் எண்.128 மற்றும் 129ஆக 1500 வாக்காளர்களுக்குள் வரையறை செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்.264 பிரிக்கப்பட்டு பாகம் எண்.265 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி, சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை 8.9.2022 முதல் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்தின் போதும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்