தேச விரோத செயல்கள் நடப்பதாக மதரசாவை இடித்த மக்கள்: வடமாநிலத்தில் தொடரும் சம்பவம்
2022-09-07@ 00:19:00

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் பகியுரா சர் பகுதியில் மதரசா இயங்கி வந்தது. இதனையொட்டி வீடும் அமைந்திருந்தது. இந்த மதரசாவை வங்கதேசத்தை சேர்ந்த 2 நபர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மதரசாவின் மத குரு ஜலாலுதீன் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தான் 2 வங்கதேசத்தினரை இங்கு ஆசிரியர்களாக நியமித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஜிகாதிகள் மூலமாக நாட்டுக்கு எதிராக தேசவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்தனர். மதரசாவிற்கு எதிராக ஒன்று திரண்ட அவர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் அதனோடு சேர்ந்து இருந்த வீடும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இடிக்கப்படும் நான்காவது மதரசா இதுவாகும்.
விசாரிக்க வேண்டும்: இதற்கிடையே, தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புராவிற்கு அசாம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுதியுள்ள கடிதத்தில், மதரசா இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Tags:
Anti-national activities Madrasa Iditha people North state தேச விரோத செயல்கள் மதரசா இடித்த மக்கள் வடமாநிலத்தில்மேலும் செய்திகள்
விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி
சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!