ஊட்டி டேவிஸ் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்-பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி
2022-09-06@ 13:00:24

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டேவிஸ் பூங்கா சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இப்பூங்காக்கள் துவக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. ஆனால், இடையில் பல ஆண்டுகள் இப்பூங்காக்களை பராமரிக்கப்படாத நிலையில், அனைத்து பூங்காக்களும் புதர்மண்டி சமூக வீரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனை தொடர்ந்து இப்பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூங்காக்கள் அனைத்தும் பொலிவுப்படுத்தப்பட்டன.
ஆனால், கடந்த அதிமுக., ஆட்சியின் போது, 10 ஆண்டுகளும் இந்த பூங்காக்களை பராமரிக்காமல் விடப்பட்டது. இதனால், அனைத்து பூங்காக்களும் பொலிவிழந்து காணப்படுகிறது. குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள டேவிஸ் பூங்கா முற்றிலும் பராமரிப்பின்றி காடாக மாறியது. இதனால், இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது. எனவே, இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, இப்பூங்காவை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வந்தது. இப்பூங்காவை சீரமைக்க தற்போது ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பூங்காவில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பூங்காவை சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இப்பூங்காவை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!