உத்திரமேரூர் அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா தொடக்கம்
2022-09-06@ 01:44:07

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மடம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 322ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர் செல்வம் ஆலய வளாகத்தில் அமைத்து கொடுத்த புதிய கொடிக்கம்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றி, ஆலய வளாகத்தில் சிறப்பு பிராத்தனை நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறும். கடைசி நாளான 8ம் தேதியன்று திருதேர் வீதியுலா நடைப்பெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மல்லிகாபுரம் பங்கு தந்தை வினோத்ராஜ், அமுதாசெல்வம் உட்பட விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு
ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி-நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை அதிகாரி ஆய்வு-அதிவேக ரயிலை இயக்கி சோதனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!