ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு
2022-09-06@ 01:08:09

ஆவடி: ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் இருபுறமும் எல்.சி., கேட் 8 உள்ளது. இந்த ரயில்வே கேட் பெரும்பாலும் மூடியே இருக்கும். இந்த ரயில்வே கேட்டை நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு காரணங்களுக்காக கடந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வந்தன. ஆவடி ரிசர்வ் போலீசார் இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் மீது அபராதங்கள் விதித்து வந்தனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து, எல்.சி., கேட் 8ன் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்லாதவாறு தண்டவாளத்தின் குறுக்கு கல்லை கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `ரயில் நிலையத்தில் ஏற்படும் தொடர் விபத்தால், தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, எல்.சி.,கேட் 8ன் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்’ என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!