ரஷ்ய தூதரகத்தை குறிவைத்து காபூலில் குண்டு வெடிப்பு: ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
2022-09-05@ 16:46:49

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை படை தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் இரண்டு ரஷ்ய தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் தற்கொலை படையை சேர்ந்தவராக இருக்கலாம். மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தூதரகம் முன்பு விசாவிற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.
மேலும் செய்திகள்
3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைனுக்கு மீண்டும் அமெரிக்கா உதவி: 31 அதிநவீன பீரங்கிகளை அனுப்புவதாக அறிவிப்பு
இம்ரான்கான் பாதுகாப்பு வாபஸ்
ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவிட்டு இளைஞனாக மாற முயலும் 45 வயது தொழிலதிபர்
2 ஆண்டுக்கு பின் தடை நீங்கியது பேஸ்புக்கில் மீண்டும் டிரம்ப்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கருத்து
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!