சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை நாளை துவக்கி வைக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்
2022-09-05@ 15:17:29

சென்னை: சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை அமைச்சர் பெரியகருப்பன் நாளை துவக்கி வைக்கிறார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளைத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானதுக் கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து `SARAS’ எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இக்கண்காட்சிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புறக் கைவினைஞர்கள் தயாரிக்கும் பழம்பெருமை வாய்ந்த கலைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், புவிசார் குறியீடு பெற்ற தனித்துவம் வாய்ந்த பொருட்கள், இயற்கை வழியில் தயாரித்த பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, 06.09.2022 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு, சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினைத் துவக்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா சிறப்பு மலரை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் வெளியிட்டு விழாப் பேருரை ஆற்ற உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் செய்திகள்
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!