ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு: 4 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழப்பு..!!
2022-09-05@ 12:32:18

காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஆப்கனின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் அருகே உள்ள நாட் அலி என்ற இடத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது அவர்களுக்கு வெடிக்காத குண்டு ஒன்று கிடைத்துள்ளது. அதனை வைத்து சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் 4 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தாலிபான் படையினர், காயமடைந்த 8 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி அருகே வெடிகுண்டு வந்தது எப்படி? என விசாரித்து வரும் தாலிபான் படையினர், அந்த பகுதியில் வேறு ஏதேனும் குண்டு உள்ளதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
பெரு நாட்டில் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தல்
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கு: இலங்கை மாஜி அதிபரிடம் போலீஸ் விசாரணை
தோண்ட தோண்ட சடலங்கள்!: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது..!!
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் பலி
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!