வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவக்கம்
2022-09-04@ 15:09:50

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவங்கியது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி கடந்த 2ம் தேதி அபிஷேகம், அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான 11ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் இரவு அம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது. இந்த ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை, தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம் மற்றும் வாணவேடிக்கையும் பொய்க்கால் குதிரை நையாண்டி மேளம் கரகாட்டம், கேரள செண்டை மேளம் காஞ்சி கைச் சிலம்புடன் நடைபெற உள்ளது.
ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் பகல் 12 மணியளவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வேம்புலி அம்மன் சேவை சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
கோயில் காணிக்கை எண்ணும் பணி யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு
முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை
‘அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கணும்’
பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி
கோயில்களில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!