10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு
2022-09-04@ 00:29:30

சென்னை: வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனும் நிலை இருந்தது. தற்போது அந்நிலை மாற்றப்பட்டு ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்ற நிலை உள்ளது.இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால், அந்த தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தொடர்ந்து, வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தற்போது, இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 ஒத்திவைக்கப்படுகிறது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!