ஆவடி அருகே ஜல்லிகள் கொட்டி பல நாட்களாகியும் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
2022-09-03@ 18:10:05

ஆவடி: ஆவடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த தெரு பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடிவு செய்தது. இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. அதற்கு பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் இவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
முதியவர்களும், சிறுவர்களும் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்குகூட ஆட்டோ வரமுடியாத நிலை உள்ளது. மேலும் இந்த தெருவின் கால்வாய் வசதி இல்லை. அதனால் கழிவுநீர் சாலையிலேயே தேங்குவதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலை பணி மற்றும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!