குன்னூர் அருகே உணவு தேடி ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்
2022-09-03@ 18:09:36

ஊட்டி: குன்னூர் அருகே உணவு தேடி சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேரட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பேரட்டி கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி, தேயிலை தோட்டம் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிலர் கூறிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமன் என்பவர் வீட்டில் இரண்டு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு இரண்டு சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. சிறிது நேரம் அந்த வீட்டைச் சுற்றிலும் இரு சிறுத்தைகளும் வலம் வந்தன.
வளர்ப்பு பிராணிகள் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து அந்த சிறுத்தைகள் இரண்டும் காட்டிற்குள் சென்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் 2 சிறுத்தைகள் நடமாடுவது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கண்ட ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவினை வனத்துறையினருக்கு காண்பித்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!