உக்ரைனை நோக்கி செல்லாமல் ரஷ்யாவை தாக்கிய சொந்த ஏவுகணை
2022-09-03@ 00:20:34

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று திடீரென திரும்பி, சொந்த பகுதியையே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 6 மாதங்களாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் கடந்த புதன்று வட கிழக்கு உக்ரைனை நோக்கி எஸ்-300 என்ற 6 ஏவுகணைகளை ஏவினர். ஆனால், விண்ணில் ஏவப்பட்ட ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அது, உக்ரைன் இலக்கை நோக்கி செல்லாமல், திடீரென திரும்பி ரஷ்ய பகுதியையே தாக்கியது. உக்ரைக்கு அருகே அமைந்துள்ள பெல்கோரோட் நகரில் இந்த ஏவுகணை தாக்கியது. உக்ரைன் எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் இருக்கும் இந்த பகுதி, ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்தது. ஆனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏவுகணை சொந்த நாட்டிலேயே விழுந்து பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் ரஷ்ய அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!