கால்பந்து கூட்டமைப்பு தலைவராக சவுபே தேர்வு
2022-09-03@ 00:20:28

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஐஎப்) தலைவராக இந்திய அணி முன்னாள் கோல் கீப்பர் கல்யாண் சவுபே (45 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியாவுடன் போட்டியிட்ட கல்யாண் சவுபே 33-1 என்ற கணக்கில் மாநில கால்பந்து சங்க உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். இந்திய அணியில் கோல் கீப்பராக இவர் இடம் பெற்றிருந்தாலும், சீனியர் அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யு-17, யு-21 அணிகளுக்காகவும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்காகவும் கோல் கீப்பராக செயல்பட்டுள்ளார். 85 ஆண்டு ஏஐஐஎப் வரலாற்றில் தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் கால்பந்து வீரர் இவர் தான். இதற்கு முன் தலைவர்களாக இருந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, பிரபுல் படேல் முழு நேர அரசியல்வாதிகள் ஆவர்.
மேலும் செய்திகள்
மகளிர் உலக கோப்பை டி20; பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் பைனலில் சுரென்கோ
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் சவுராஷ்டிரா
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!