ஆளும் பாஜகவுக்கு எதிராக 3வது அணியைவிட பலமான கூட்டணியே தேவை: நிதிஷை சந்தித்த சந்திரசேகர ராவ் கருத்து
2022-09-02@ 21:17:00

பாட்னா: ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவதை காட்டிலும் பலமான கூட்டணியே தேவை என்று பீகார் முதல்வரை சந்தித்த சந்திரசேகர ராவ் தெரிவித்தார். தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவரும், நிதிஷ் குமாரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நிதிஷ் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரசேகர ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம்’ என்றார்.
தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கு என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், ‘பாஜகவிற்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவது எனது வேலையில்லை; பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்குவதே எனது வேலையாகவும், முயற்சியாகவும் உள்ளது. பாஜக தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!