யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் நடால், சபலென்கா
2022-09-02@ 14:45:42

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2வது சுற்று போட்டிகள் இன்று நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 6ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் 37 வயதான எஸ்டோனியாகையா கனேபியை போராடி வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். செக் குடியரசின் 30 வயது கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில், சகநாட்டைச் சேர்ந்த மேரிபவுஸ்கோவாவை சாய்த்தார்.
அமெரிக்காவின் 28 வயதான டேனியல் காலின்ஸ், 6-2, 7-5 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவையும், 28 வயது ஸ்பெயினின் முகுருசா, 6-0, 6-4 என செக்குடியரசின் லிண்டாவையும், பிரான்சின் கிளாராபுரல் 6-4, 4-6, 6-4 என பெல்ஜியத்தின் அலிசன் வானையும் வீழ்த்தினர். முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சையும், குரோஷியாவின் பெட்ரா மார்டிக், 6-7, 6-1, 6-2 என 4ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவையும் வென்றனர்.
ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னியுடன் இன்று மோதினார். இதில் முதல் செட்டை இழந்த 2-6 என இழந்த நடால், அடுத்த 3 செட்டை 6-4,6-2, 6-1 என கைப்பற்றி 3ம் சுற்றுக்குள் நுழைந்தார்.
மேலும் செய்திகள்
கைல் மேயர்ஸ் 73 ரன் விளாசல் லக்னோ ரன் குவிப்பு
மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்
இன்னும் 20 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி
மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை
ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு
வண்ணமயமான தொடக்க விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!