2 மாதங்களுக்கு பிறகு 3 டிஎம்சி கொள்ளளவை எட்டியது புழல் ஏரி: கடல்போல காட்சி அளிக்கிறது
2022-09-02@ 00:22:02

சென்னை: புழல் ஏரி இரண்டு மாதங்களுக்கு பிறகு, 3 டிஎம்சி கொள்ளளவை எட்டி கடல்போல காட்சி அளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சி நீர் இருப்பை கொண்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 3002 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவில் 90.96% தண்ணீர் தற்போது நிறைந்துள்ளது. மழைநீர் மட்டுமல்லாது, பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வினாடிக்கு 256 கனஅடிநீர் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக, ஏரியில் இருந்து 160 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக, கடந்த ஓராண்டாகவே புழல் ஏரியில் நீர் இருப்பு 80% அதிகமாகவே நீடித்து வந்தது. ஏரியில் நீர்மட்டம் சற்று சரிந்து வந்த நிலையில், மீண்டும் 3 டிஎம்சி கொள்ளளவை எட்டியுள்ளது. ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!