ரூ.455 கோடி லஞ்சம் மலேசிய முன்னாள் பிரதமர் மனைவிக்கு 10 ஆண்டு சிறை: ரூ.1,730 கோடி அபராதம்
2022-09-02@ 00:04:31

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு 2 ஊழல் வழக்கில் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த வாரம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா, போர்னியோவில் உள்ள பள்ளியில் சூரியசக்தி மின்தகடுகள் அமைக்கும் பணி ஒப்பந்தத்ததுக்காக கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.120 கோடியும், மற்றொரு ஊழல் வழக்கில் ரூ.335 கோடியும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த மலேசிய உச்ச நீதிமன்றம், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், ரூ. 1,730 கோடி அபராதமும் விதித்தது. இதையடுத்து, தனது கணவர் சிறை சென்ற ஒரு வார காலத்தில், நேற்று ரோஸ்மாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:
Rs 455 crore bribe former Malaysian Prime Minister's wife 10 years in jail Rs 1 730 crore fine ரூ.455 கோடி லஞ்சம் மலேசிய முன்னாள் பிரதமர் மனைவி 10 ஆண்டு சிறை ரூ.1 730 கோடி அபராதம்மேலும் செய்திகள்
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!