முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை
2022-09-01@ 21:45:30

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் திருவனந்தபுரத்தில் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் முன்னதாகவே நாளை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இரு மாநில உறவுகள் குறித்து பேச உள்ளார். குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிலவி வரும் பிரச்னைகள் குறித்து இருவரும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. பேபி அணை முன் உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும் என்று தமிழகம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. முதலில் கேரளா இதற்கு சம்மதித்த போதிலும் பின்னர் முடிவை வாபஸ் பெற்று விட்டது.
இதையடுத்து மரங்களை வெட்ட கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேரளாவிடம் முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு அறிவுறுத்தியுள்ளது. இது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும் செய்திகள்
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!