மீட்கப்பட்ட பணிப்பெண்ணின் அவலநிலை உடல் முழுவதும் காயங்கள் பற்களை உடைத்து சித்ரவதை: கொடுமைப்படுத்திய பாஜ மகளிரணி தலைவி கைது
2022-09-01@ 02:47:51

ராஞ்சி: பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ராவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பழங்குடியின பணிப்பெண்ணுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும், அவரின் பல பற்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ரா. இவரது கணவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. பத்ரா வீட்டில், 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவர் கடந்த 10 ஆண்டாக வேலை செய்து வந்தார். அவரை பத்ரா கடந்த 8 ஆண்டாக அறையில் பூட்டி வைத்து மனிதாபிமானம் இல்லாமல் சித்ரவதை செய்துள்ளார்.
சிறுநீரை குடிக்க வைத்தும், இரும்பு ராடால் அடித்தும் கொடுமைபடுத்தி உள்ளார். பத்ரா மகனின் நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ராஞ்சி அர்கோரா போலீசார், பத்ரா வீட்டிலிருந்து சுனிதாவை மீட்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சுனிதாவின் உடல் நிலை குறித்து போலீசார் கூறுகையில், ‘அவரது உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பல பற்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. உடலில் பல இடங்களில் தீக்காயங்களும் உள்ளது. சுனிதா மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது,’ என்றனர். இதற்கிடையே, பணிப்பெண்ணை கொடுமைபடுத்திய சீமா பத்ராவை பாஜ கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. சுனிதா புகாரின் பேரில் ராஞ்சி போலீசார் நேற்று அதிகாலை சீமா பத்ராவை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!