முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்
2022-08-31@ 00:20:50

கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. நிலக்கரி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பாக நேற்று அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், வெள்ளியன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
Chief Minister Mamata son-in-law Abhishek Baner summons by the enforcement department முதல்வர் மம்தா மருமகன் அபிஷேக் பானர் அமலாக்கத்துறை சம்மன்மேலும் செய்திகள்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!