சென்னை அண்ணா பல்கலை.யில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
2022-08-30@ 10:30:32

சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் 21 பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் நூற்றுக்கணக்கான இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வித்துறையின் காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் ஒருபகுதியாக பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அலுவலர்கள், மாநில கொள்கை குழு தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல், பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்ட மாற்றம், அரசு கலை கல்லூரிகளில் இடங்களை அதிகரித்தல், மாநில கல்வி கொள்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!