SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரா ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத குழந்தை பாஜக நகராட்சி தலைவர் வீட்டில் இருந்து மீட்பு: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது..!!

2022-08-30@ 10:03:28

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத குழந்தை அம்மாநில பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை இரவில் ரயில் நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று தாயுடன் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு மிடுக்காக உடை அணிந்து வந்த நபர் ஒருவர், அக்கம்பக்கத்தில் நோக்கமிட்டபடி அந்த குழந்தையை தூக்கி சென்றார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மதுரா ரயில் நிலையத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ரிசோவ் பாக் மாவட்டத்தில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த நகராட்சி தலைவரின் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர்.

ஹத்ராஸ் அருகே மருத்துவமனை நடத்தி வரும் 2 மருத்துவர்கள், குழந்தை கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த கும்பலிடம் இருந்து பாஜக நிர்வாகி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கியுள்ளார். குழந்தையை கடத்தி சென்றவர் மற்றும் மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உத்திரப்பிரதேச போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்