தேசிய கொடியை வாங்க மறுத்த அமித்ஷா மகன்; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்
2022-08-30@ 01:50:34

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்திய போது, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார். அப்போது, அவரது அருகில் இருந்தவர் ஜெய்ஷாவின் கையில் தேசிய கொடியை கொடுக்க முன் வந்தார். ஆனால், அவர் அதனை வாங்க மறுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஜெய்ஷாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்பட பல்வேறு அரசியல்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!
மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது: பெங்களூரு பாஜக அலுவலகம் முன்பு போராட்டம்
புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும்: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!