மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய கார் ரூ.6 கோடிக்கு ஏலம்..!!
2022-08-29@ 11:07:38

லண்டன்: மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய கார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற பிரிட்டன் இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25வது நினைவு தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய கார் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் கலந்துக்கொண்டனர்.
காருக்கான ஏலம் இந்திய மதிப்பில் 93 லட்சம் ரூபாய்க்கு தொடங்கியது. பலத்த போட்டிக்கு இடையே இறுதியில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டயானா பயன்படுத்திய Ford கார் ஏலத்தில் எடுக்கப்பட்டது. வடமேற்கு இங்கிலாந்தின் ஆர்டர்லே எச் என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த காரை வாங்கி இருப்பதாக கூறியிருக்கும் ஏல நிறுவனம், அவரது விவரங்களை உடனடியாக வெளியிடவில்லை.
மேலும் செய்திகள்
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு
போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.
இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி