வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா?: ஆய்வு செய்ய ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்
2022-08-29@ 02:08:16

சென்னை: வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்சார வேலிகளும் முக்கியமான காரணமாக இருக்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் நடத்தும் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்வாறு மின்சார வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் இறப்பதை தடுக்க மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மின்வேலிகளில் இருந்து வெளியேறும் மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் இறப்பதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில வழிகாட்டுதல்களை ஏற்கனவே வழங்கியுள்ளது. அதன்படி மின்வாரிய ஊழியர் அப்பகுதி வனத்துறை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வன விலங்குகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளை அடையாளம் காண ஒலிபரப்பு கம்பிகளை நிறுவி பராமரிக்க வேண்டும்.
வன பகுதிகளில் ஏதேனும் நேரடி மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும். வனப்பகுதிகளுக்கு அருகில் நேரடி மின்சார வேலிகள் இருந்தால் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். கிராமங்களில் உள்ள பிரிவு அலுவலகங்கள்/ செய்தித்தாள், ஊடகம், தண்டோரா ஆகியவற்றின் மூலமாக விளம்பரம் செய்வது, பிட் நோட்டீஸ் வழங்குவதன் மூலம் இவ்வாறு மின்சார வேலிகள் அமைப்பது கிரிமினல் குற்றம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். அப்போது மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டும். இது ரூ.10,000 வரை நீட்டிக்கப்படலாம் அல்லது சிறைதண்டனையுடன் அபராதமும் விதிகப்படும் நிலை மின்சாரச் சட்டம் 138வது பிரிவின்படி இருக்கலாம் என்பதை தெரியப்படுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!