எழுந்து நின்று பேசமாட்டீயா? ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
2022-08-29@ 01:51:59

சென்னை: எழுந்து நின்று பேசமாட்டீயா என ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள மின்வாரிய உதவி பொரியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிலை முகவராக பணியாற்றி வருபவர் பாபு (55). இவர் வழக்கம் போல் உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்தார். அப்போது அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் நாராயணசாமி (42), அந்த அலுவலகத்திற்கு வந்தார்.
தன்னை யார் என்று அறிமுகம் செய்யாமல் ‘எனக்கு தனியாக மீட்டர் இணைப்பு கேட்டிருந்தேன் கொடுத்தாயா, இல்லையா என தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல உனக்கு என்னடா டேபுள் சேர், நீ என்ன உட்கார்ந்து கொண்டு என்னிடம் பேசுகிறாய், எழுந்து நில்லுடா நாயே என்று கூறி இடது கன்னத்தில் அறைந்தததாக கூறப்படுகிறது. என்ன என்று தெரியாமல் ஒருவர் தன்னை அடித்து விட்டு செல்கிறார் என உதவி பொறியாளர் வசந்தகுமாரியிடம், பாபு புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், அவரை கன்னத்தில் அறைந்தது தலைமை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி என தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி மீது ஐபிசி 294 (பி), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!