பேரண்டூர் கிராமத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
2022-08-28@ 17:01:32

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். இங்குள்ள விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இங்குள்ள நெற்பயிர்கள் அனைத்தும் விளைந்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டது. இன்னும் சில நாட்கள் தண்ணீரில் மிதந்ததால அனைத்தும் அழுகிவிடும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர். எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு நெற்பயிர்கள் அழுகிய விவசாயிகளுக்கு சென்று இழப்பீடு வழங்கவேண்டும் என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘பேரண்டூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு ₹ 25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவு செய்து கடந்த 4 மாதங்களாக நெற்பயிர் சாகுபடி செய்துள்ளோம்.
அறுவடை செய்ய ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திடீரென பெய்த மழையால் பயிர்களில் மழைநீர் சூழ்ந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் பயிர்கள் தண்ணீரில் கிடந்ததால் அழுகியும் முளைத்தும் விடும். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!