திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1,38 கோடி உண்டியல் வசூல்
2022-08-27@ 19:37:32

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் 1 கோடியே 38 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் பல மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளுகின்றனர். இவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள், கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 24 நாட்களில் வசூலான உண்டியல் பணம் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், மொத்தம் 1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் வசூலாகியிருந்தது. இதுதவிர 320 கிராம் தங்கம் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது. 11,480 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். இதுபோல் திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருவாலங்காடு வடாரேண்ஸ்வரர் கோயில், மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், கோட்டை ஆறுமுகசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. பின்னர் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!