செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
2022-08-27@ 19:36:55

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் நகரில் நாளொன்றுக்கு 20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 10 டன் நெகிழிகளின் கழிவாக உள்ளது. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் கழிவு பொருட்கள் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது.
இவைகளை சேகரித்து தரம் பிரிக்காமல் துப்புரவு பணியாளர்கள் பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் பல டன் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. தரம் பிரிக்காத குப்பையால் உரம் தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் குப்பை தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், துப்புரவு ஊழியர்களிடம் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவு ஊழியர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!