'அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களே இருக்கிறீர்கள்': 4 இந்திய வம்சாவளிப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய மெக்சிகோ பெண் கைது..!!
2022-08-26@ 15:50:19

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் மீது மெக்சிகோ அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் டலாஸ் நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹோட்டல் ஒன்றுக்கு உணவருந்த சென்ற இந்திய வம்சாவளி பெண்களை பார்த்த, மெக்சிகோ வம்சாவளி பெண் ஒருவர், மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடினார்.
அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களே உள்ளீர்கள் என்று சீரிய அந்த பெண், இந்திய வாழ்க்கை சிறப்பானது என்றால் இந்தியாவுக்கே செல்லுங்கள் என்று கத்தினார். ஒரு கட்டத்தில் 4 இந்திய பெண்களையும் அந்த பெண் கைகளால் தாக்க தொடங்கினார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தை இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து அந்த பெண்ணை டலாஸ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் அமெரிக்காவில் பிறந்த மெக்சிகோ வம்சாவளியான எஸ்மிரல்டா என்பவர் ஆவார்.
அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இனவெறியுடன் தாக்குதல் நடத்துதல், அச்சுறுத்தும் வகையில் திட்டுதல் போன்ற கடுமையான பிரிவுகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பிணையில் வர 8 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்தியர்கள் தங்கள் கல்வியால், முறைப்படியான விசா நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். ஆனால் மெக்சிகோ நாட்டின் பெரும்பாலானவர்கள், கள்ளத்தனமாக எல்லைகளை கடந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆவர். அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் இனவெறி தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகள்
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் உரை
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த மழைநீர்..!!
அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு
சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!