அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!
2022-08-26@ 11:54:52

சென்னை: அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதனை சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களை தேர்வு செய்து அயல்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
காட்சி ஊடகத்தின் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். அதன்படி மாதந்தோறும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் ஒன்றை 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,
* அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.
* திரைப்படத்துக்கு என ஒதுக்கப்பட்ட பாடவேளையில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும்.
* படம் திரையிடுவதற்கு முன்பும், பின்னும் அதுகுறித்து மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
* எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு கல்வித்துறை விவரங்களை அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* திரைப்படம் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதித் தர வேண்டியது கட்டாயம்.
* பள்ளியளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
* வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!