தஞ்சையில் காதல் திருமணம் செய்த எஸ்ஐக்கு வரதட்சணை கொடுமை கள்ளக்காதலியுடன் கணவர் கைது
2022-08-26@ 01:09:40

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ்வேந்தன். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சசிரேகா(33). தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுகிறார். 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், கடந்த 2018ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் புகழ்வேந்தன், மனைவி சசிரேகாவை வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறி அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிரேகா கொடுத்த புகாரில், கணவர் புகழ்வேந்தன், நூர்ஜகான்(35) என்பவரை 2வது திருமணம் செய்ய முடிவெடுத்தார். நானும் அதை ஏற்று இனி என்னிடம் வரவேண்டாம் என கூறிவிட்டேன். அதன் பின்னரும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்.
அவர் மீதும், அதற்கு தூண்டுதலாக உள்ள நூர்ஜகான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே 3 பேரை மணந்த நூர்ஜகான் 4வதாக புகழ்வேந்தனை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து புகழ்வேந்தன் மற்றும் கள்ளக்காதலி நூர்ஜகானை நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!