அகஸ்தியர் அருவியில் ஒரேநாளில் ரூ.85 ஆயிரம் வசூல்
2022-08-24@ 18:17:17

விகேபுரம்: அகஸ்தியர் அருவியில் கடந்த 21ம்தேதி (ஞாயிறு) ஒரே நாளில் மட்டும் ரூ.85 ஆயிரம் வசூலானது. பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை 3 நாட்கள் அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியை நோக்கி படையெடுத்தனர்.
குறிப்பாக கடந்த ஞாயிற்று கிழமை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அகஸ்தியர் அருவிக்கு வாகனங்கள் மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோரிடம் நுழைவு கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 880ம், கேன்டீன் ரூ.10 ஆயிரம் மற்றும் கயல் பூங்கா மூலமாக ரூ.680 என மொத்தம் ரூ.85,615 வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு நபர் குளிப்பதற்கு ரூ.30, வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!