ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி; பொதுமக்கள் புகார்
2022-08-24@ 00:53:03

ஆவடி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் போதிய குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 1000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த தண்ணீர் சேதமடைந்தது.
மேலும் அங்கிருந்த மின் மோட்டார் பழுதானதுடன், மின்சார கம்பிகள் அறுந்தது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் உப்பு தண்ணீரை பருகி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் வரும் அபாயமும் உள்ளது. மேலும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். எனவே ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!